எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

அமீரகத் தமிழ்த்தேருக்காக - காதல் இனிது.

காதல் இனிது:-
**********************
கட்டிக் கரும்பெனவும்
கெட்டிச் சமத்தெனவும்
தொட்டுக் கலந்த அவன்
தொடாமல் சொல்லும்போது
காதல் இனிது.

முகம் பார்த்து மனம் பார்க்கும்
உடல் பார்த்து உணர்வு அறியும்
கரம் கோர்த்து அவன் நடந்தால்
காதல் இனிது.

உணவுக்குள் உணவாகி
அவன் கனவுக்குள் கனவாகி
நினைவெல்லாம் நனவாக்கி
நறுமுகையாய் அவள் விரிந்தால்
காதல் இனிது.

உழைக்குமவன் உன்னதமும்
கணப்பொழுதின் சன்னதமும்
நொடிப்பொழுது நினைத்துவிட்டு
ஊடலைக் கைவிட்டால்
காதல் இனிது.

ஓராயிரம் பெண்ணுண்டு
ஒருவனுக்கு ஒருத்தியென்னும்
உயர்தர்மம் தழைத்திட்டால்
ஈருடலும் ஓருயிராயினிக்க என்றென்றும்
காதல் இனிது.

டிஸ்கி :- இந்தக் கவிதை அமீரகத்தில் இருந்து வெளிவரும் தமிழ்த் தேர் தைமாத இதழில் ( 2015 ) பிரசுரமாகி உள்ளது. நன்றி தமிழ்த் தேர், காவிரி மைந்தன் சகோ. புகைப்படம் எடுத்துப் பகிர்ந்தமைக்கு நாகினி கருப்பசாமி.:)

.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...